PMModi [Image Source : NDTV]
பிபார் ஜாய் புயல் தொடர்பான நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் “பிபார் ஜாய்” 6 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி திசையில் நகர்ந்து, அதி தீவிர புயலாக வலுப்பெற்று, அதே பகுதியில் மும்பையில் இருந்து மேற்கே சுமார் 560 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரின் இருந்து தென்மேற்கில் சுமார் 340 கிலோமீட்டர் தொலைவில், 380 கிமீ தென்-தென்மேற்கில் தேவபூமி துவாரகாமில் நிலை கொண்டுள்ளது.
மேலும் இந்த புயல் வலுப்பெற்று, 14ம் தேதி காலை வரை வடக்கு நோக்கி நகர்ந்து, பிறகு, வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து சௌராஷ்டிரா, கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதியில் உள்ள ஜகாவ் துறைமுகத்திற்கு அருகே, 15ம் தேதி மிக தீவிர புயலாக மாறி, 150 கிமீ வேகத்தில் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிமீ வேகத்தில் வீசும் என்றும், அப்பகுதி முழுவதும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பிபார் ஜாய் புயல் தொடர்பான நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று மதியம் 1 மணிக்கு நடைபெறவுள்ளது.
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…
மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…