Categories: இந்தியா

5 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

Published by
செந்தில்குமார்

பிரதமர் மோடி 5 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து ஒரே நேரத்தில் ஐந்து புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆளுநர் மங்குபாய் சி படேல், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷா, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் படி, தயாரிக்கப்பட்ட இந்த ரயில்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களை இணைக்கும். இந்த ரயில்கள் மும்பை-கோவா, பாட்னா-ராஞ்சி, போபால்-இந்தூர், போபால்-ஜபல்பூர் மற்றும் பெங்களூர்-ஹூப்ளி-தர்வாட் ஆகிய வழித்தடங்கள் இடையே இயக்கப்படும். நாட்டில் இதுவரை 18 வழி தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதல் முறையாக ஒரே நேரத்தில் ஐந்து வழித்தடங்களில் 5 வந்தே பாரத் ரயில்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளது.  இதனால் நாட்டில் உள்ள வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை – கோவா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்:

இது கோவாவின் முதல் அரை அதிவேக ரயிலாகும். இது மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் கோவாவின் மட்கான் இடையே இயக்கப்படும். இந்த ரயில் வெள்ளிக்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும். இந்த ரயில் பாதையில் இயங்கும் ரயில்களுடன் ஒப்பிடும்போது பயண நேரத்தை சுமார் ஒரு மணி நேரம் மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தார்வாட் – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்:

கர்நாடகாவில் உள்ள தார்வாட் – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தார்வாட் , ஹுப்பள்ளி மற்றும் தாவங்கேரே போன்ற முக்கிய நகரங்களை மாநில தலைநகர் பெங்களூருவுடன் இணைக்கும். இந்த ரயில் பாதையில் இயங்கும் ரயில்களுடன் ஒப்பிடும்போது பயண நேரத்தை 30 நிமிடங்கள் மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போபால்-இந்தூர்:

போபால் மற்றும் ஜபல்பூர் மற்றும் இந்தூர் இடையே இணைப்பை மேம்படுத்தும் இரண்டு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கிடைக்கும். இது மாநிலத்தின் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில், புதுடெல்லி-போபால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முன்பு தொடங்கப்பட்டது. இந்த ரயில் பாதையில் இயங்கும் ரயில்களுடன் ஒப்பிடும்போது பயண நேரத்தை சுமார் 2.30 மணிநேரம் மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போபால்-ஜபல்பூர்:

பிரதமர் மோடி திறந்து வைக்கும் மற்றொரு ரயில் போபால்-ஜபல்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் பல விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் பாதையில் இயங்கும் ரயில்களுடன் ஒப்பிடும்போது பயண நேரத்தை 30 நிமிடங்கள் மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாட்னா-ராஞ்சி:

ஐந்து ரயில்களில் ஒன்று பீகார் மற்றும் ஜார்கண்டின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்திய ரயில்வே பாட்னா மற்றும் ராஞ்சி வழித்தடங்களில் அரை-அதிவேக ரயிலை தொடங்குகிறது. இந்த ரயில் 30 நிமிடங்கள் பயண நேரத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…

37 minutes ago

பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ்! எம்எல்ஏ அருளுக்கு இடம்!

திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…

1 hour ago

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

16 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

16 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

17 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

17 hours ago