Categories: இந்தியா

5 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

Published by
செந்தில்குமார்

பிரதமர் மோடி 5 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து ஒரே நேரத்தில் ஐந்து புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆளுநர் மங்குபாய் சி படேல், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷா, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் படி, தயாரிக்கப்பட்ட இந்த ரயில்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களை இணைக்கும். இந்த ரயில்கள் மும்பை-கோவா, பாட்னா-ராஞ்சி, போபால்-இந்தூர், போபால்-ஜபல்பூர் மற்றும் பெங்களூர்-ஹூப்ளி-தர்வாட் ஆகிய வழித்தடங்கள் இடையே இயக்கப்படும். நாட்டில் இதுவரை 18 வழி தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதல் முறையாக ஒரே நேரத்தில் ஐந்து வழித்தடங்களில் 5 வந்தே பாரத் ரயில்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளது.  இதனால் நாட்டில் உள்ள வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை – கோவா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்:

இது கோவாவின் முதல் அரை அதிவேக ரயிலாகும். இது மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் கோவாவின் மட்கான் இடையே இயக்கப்படும். இந்த ரயில் வெள்ளிக்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும். இந்த ரயில் பாதையில் இயங்கும் ரயில்களுடன் ஒப்பிடும்போது பயண நேரத்தை சுமார் ஒரு மணி நேரம் மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தார்வாட் – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்:

கர்நாடகாவில் உள்ள தார்வாட் – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தார்வாட் , ஹுப்பள்ளி மற்றும் தாவங்கேரே போன்ற முக்கிய நகரங்களை மாநில தலைநகர் பெங்களூருவுடன் இணைக்கும். இந்த ரயில் பாதையில் இயங்கும் ரயில்களுடன் ஒப்பிடும்போது பயண நேரத்தை 30 நிமிடங்கள் மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போபால்-இந்தூர்:

போபால் மற்றும் ஜபல்பூர் மற்றும் இந்தூர் இடையே இணைப்பை மேம்படுத்தும் இரண்டு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கிடைக்கும். இது மாநிலத்தின் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில், புதுடெல்லி-போபால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முன்பு தொடங்கப்பட்டது. இந்த ரயில் பாதையில் இயங்கும் ரயில்களுடன் ஒப்பிடும்போது பயண நேரத்தை சுமார் 2.30 மணிநேரம் மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போபால்-ஜபல்பூர்:

பிரதமர் மோடி திறந்து வைக்கும் மற்றொரு ரயில் போபால்-ஜபல்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் பல விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் பாதையில் இயங்கும் ரயில்களுடன் ஒப்பிடும்போது பயண நேரத்தை 30 நிமிடங்கள் மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாட்னா-ராஞ்சி:

ஐந்து ரயில்களில் ஒன்று பீகார் மற்றும் ஜார்கண்டின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்திய ரயில்வே பாட்னா மற்றும் ராஞ்சி வழித்தடங்களில் அரை-அதிவேக ரயிலை தொடங்குகிறது. இந்த ரயில் 30 நிமிடங்கள் பயண நேரத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 minutes ago

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

17 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

18 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago