Categories: இந்தியா

ஜூன் 20 முதல் 25 வரை அமெரிக்கா, எகிப்து நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்.!

Published by
Muthu Kumar

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 முதல் 25 வரை அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரசுப்பயணம் செல்ல உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 20 ஆம் தேதி புறப்பட்டு அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு ஜூன் 25 ஆம் தேதி வரை அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இதில் முதலாவது பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில்  வரும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தில் கலந்து கொள்கிறார்.

கடந்த டிசம்பர் 2014 இல் ஐநா பொதுச் சபையால் அறிவிக்கப்பட்ட பின் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஜூன் 22 ஆம் தேதி அதிபர் பைடன் மற்றும் ஜில் பைடன் அழைப்பின்பேரில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் அரசு விருந்திலும் மோடி பங்கேற்கிறார்.

அதன்பிறகு ஜூன் 23ம் தேதி துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் இணைந்து பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கவுள்ளனர். இது தவிர பிரதமர் மோடி, முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் சந்திக்கவுள்ளார்.

புலம்பெயர்ந்த இந்தியர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றுகிறார். இதனை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, ஜூன் 24-25 தேதிகளில் எகிப்துக்கு அரசுமுறை பயணமாக கெய்ரோ செல்கிறார். கடந்த 2023 ஜனவரியில் இந்தியாவில் நடைபெற்ற குடியரசு தின சிறப்பு விழாவில் விருந்தினராக கலந்துகொண்ட ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இது பிரதமர் மோடிக்கு முதல் எகிப்து பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் தனது பயணத்தின் போது, ஜனாதிபதி சிசியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். எகிப்தில் உள்ள இந்திய சமூகத்தையும் சந்தித்து உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Muthu Kumar

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

2 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

19 hours ago