Categories: இந்தியா

இஸ்ரேல் – காசா போரை நிறுத்திய மோடியால் இதனை செய்ய முடியவில்லையா.? ராகுல் காந்தி விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

டெல்லி: கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், ராஜஸ்தானில் ஒரு நீட் தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்தது. 1500க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண்கள் 67 பேர் முழு மதிப்பெண்கள் என பல்வேறு குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நீட் நுழைவுத்தேர்வு முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அதில், இஸ்ரேல் – காசா போரை  பிரதமர் மோடி நிறுத்தியதாக கூறுகிறார்கள். அப்படிப்பட்டவரால் ஏன் நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவை தடுக்க முடியவில்லை.  இல்லை அவர் அதனை தடுக்க விரும்பவில்லையா.?

கல்வி நிறுவனங்களை, துணை வேந்தர்களை பாஜகவினர் கைப்பற்றி உள்ளனர். பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் இந்த முறைகேடுகள் நடைபெறுகிறது.  இதுபற்றிய விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

முன்னதாக உத்திர பிரதேச காவலர் தேர்வு முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்வு ரத்து செய்யப்படுமா என்று தெரியவில்லை. இதற்கெல்லாம் யாரோ சிலர் காரணமாக உள்ளனர். அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் நுழைவு தேர்வு மூலம் மிக பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது.

நீட் முறைகேடு ஒரு கல்வி பிரச்சனை, தேசிய பிரச்சனை, பொருளாதார பிரச்சனை ஆகும். கல்வி நிலையங்கள் பாஜகவுக்கு கீழ் இயங்கும் வரையில் இந்த நிலை மாறாது என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!

சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…

13 minutes ago

ஜூலை 4ஆம் தேதி விஜய் தலைமையில் த.வெ.க. மாநில செயற்குழு கூட்டம்.!

சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…

30 minutes ago

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…

53 minutes ago

”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…

57 minutes ago

கேரளா மழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…

2 hours ago

“இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி – தவறான செய்தி” நிதின் கட்கரி விளக்கம்.!

டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…

2 hours ago