Categories: இந்தியா

தச்சர்களிடம் மர நாற்காலி செய்ய கற்று கொண்ட ராகுல் காந்தி.!

Published by
மணிகண்டன்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோராம், தெலுங்கானா ஆகிய 5 மாநில தேர்தல் அடுத்து, நாடு முழுக்க 2024 ஏப்ரல் மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல் பரபரப்புகள் தொற்றிக்கொள்ள வரும் வேளையில் பிரதான கட்சி தலைவர்களும் தங்கள் தேர்தல் வேலைகளை மிகவும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தேர்தல் வேலைகளை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகவே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆரம்பித்து விட்டார். தமிழகத்தில் கன்னியாகுமரியில் ஆரம்பித்த பாரத ஒற்றுமை யாத்திரையானது தமிழகம் , கேரளா, கர்நாடகா என கடந்து காஷ்மீரில் நிறைவானது.

நாய்க்குட்டிக்கு பெயர் வைத்த விவகாரம்.! ராகுல்காந்தி – சோனியா காந்தி மீது புதிய புகார்.! 

அதற்கடுத்தும், பிரச்சார மேடைகள் தவிர்த்து மக்களை நேரடியாக களத்தில் சந்தித்து வந்தார் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி, வயல்வெளிகளுக்கு சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடுவது, தொண்டர்களுடன் பின்னர் அமர்ந்து இருசக்கர வாகனத்தில் பயணிப்பது என அவ்வப்போது மக்களை நேரில் சந்தித்து சாமானிய மக்களின் நிலைகளை களத்தில் இருந்து  கேட்டறிந்து வருகிறார் ராகுல்காந்தி.

கடந்த சில நாட்களாக மிசோராம் , தெலுங்கானா என தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருந்த ராகுல்காந்தி, இடையில் டெல்லியில் கிருட்டி நகரில் உள்ள மரச்சாமான்கள் செய்யும் இடத்திற்கு நேரில் சென்று அங்குள்ள தச்சர்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர்களின் வாழ்வியல் பற்றி தெரிந்துகொண்ட ராகுல்காந்தி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில்,  தச்சர்களிடம், உங்களுக்கு கடன் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என கேட்டேன், அதற்கு அவர்கள்,  “மரம் வாங்குவேன், பெரிய ஆர்டர் எடுப்பேன், கைவினை கலைஞர்களை வேலைக்கு அமர்த்துவேன், வியாபாரத்தை விரிவுபடுத்துவேன். ” என்றார்.

கிருத்தி நகரின் தச்சர் சகோதரர்களுடன் ஒரு நாள் முழுவதையும் செலவழித்து, அவர்களின் வேலையைக் கற்றுக்கொண்டேன். அவர்கள் எனக்கு ‘நாற்காலி’ செய்யும் முறையை கற்பித்தனர் எனபதிவிட்டு இருந்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

35 minutes ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

57 minutes ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

13 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

13 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

14 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

15 hours ago