Categories: இந்தியா

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ஆர்பிஐ ஆளுநர்

Published by
பாலா கலியமூர்த்தி

Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியக் கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியதாவது, குறுகியக் கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5%-ஆகவே தொடரும்.

நிலையான வைப்புத்தொகை வசதி விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆகவும் இருக்கும். நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேசமயம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது. உள்நாட்டு வளர்ச்சியை நோக்கி, நிலையான முதலீடு மற்றும் மேம்பட்ட உலகளாவிய சூழல் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும்.

2023-24 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.6% ஆக உள்ளது. இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டான 7% அல்லது அதற்கு மேற்பட்ட வளர்ச்சியாகும். ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் நாட்டின் மொத்த பணவீக்கம் 5.1% ஆகக் குறைந்துள்ளது.

பணவீக்கத்தில் கவனம் செலுத்தி 4% இலக்கை அடைவதை உறுதி செய்ய வேண்டும். மார்ச் 29, 2024 நிலவரப்படி இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 645.6 பில்லியன் டாலரை எட்டியது எனவும் தெரிவித்தார். எனவே, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்ற ரிசர்வ் வங்கி முடிவால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் பழைய நிலையிலேயே நீடிக்கிறது.

Recent Posts

பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!

கனடா :  கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…

12 minutes ago

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

10 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

10 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

11 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

12 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

13 hours ago