Categories: இந்தியா

Naresh Goyal : ரூ.538 கோடி மோசடி.? ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் அதிரடி கைது.!

Published by
மணிகண்டன்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் இருந்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனமானது  ரூ.848.86 கோடி கடனாக பெற்றுள்ளது. அதில் ரூ. 538.62 கோடி கடன் தொகை இன்னும் நிலுவையில் உள்ளதாக கனரா வங்கி புகார் அளித்து இருந்தது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனமானது, கடந்த ஏப்ரல் 2019-ம் ஆண்டு தங்கள் வர்த்தக செயல்பாடுகளை நிறுத்தியது. மேலும், அதன் நிறுவனர் நரேஷ் கோயல் விமான நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகைவிட்டார்.

இந்நிலையில் இந்த கடன் வழக்கை பதிவு செய்துகொண்ட அமலாக்கத்துறையினர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி ,  ஜெட் ஏர்வேஸ் நிறுவன முக்கிய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் நேற்று நரேஷ் கோயல் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தார்.

இதனை அடுத்து நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நீண்ட நேர விசாரணைக்கு நரேஷ் கோயல் உட்படுத்தபட்டு இருந்தார். இந்த விசாரணை முடிவில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் நரேஷ் கோயலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

3 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

4 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

5 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

6 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

7 hours ago