Categories: இந்தியா

தோசைக்கு சாம்பார் தரவில்லை.! உணவகத்திற்கு நீதிமன்றம் அபராதம்..!

Published by
செந்தில்குமார்

பீகாரில் தோசைக்கு சாம்பார் தராததால் உணவகத்திற்கு ரூ.3,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பீகாரின் பக்ஸரில் உள்ள ஒரு உணவகத்தில் மணீஷ் பதக் என்ற வழக்கறிஞர் ஒருவர் ரூ.140 மதிப்பிலான மசாலா தோசை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பிறகு தனது ஆர்டரை வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து பார்சலை திறந்து பார்த்தபோது தோசையுடன் இருக்கக் கூடிய சாம்பார் இல்லாமல் இருந்துள்ளது.

பிறகு, நேரடியாக உணவகத்திற்கு சென்று உரிமையாளரிடம் புகாரளித்ததோடு, நோட்டீஸும் அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கு உணவகத்தின் உரிமையாளர் சரியான பதில் அளிக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான மணீஷ் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் பக்கம் உள்ள நீதியை மையமாக வைத்து, அவரது உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ரூ.2,000 அபராதமும், நீதிமன்ற செலவுக்கு ரூ.1,500 அபராதமும் விதித்தது. இந்த அபராத தொகையை செலுத்த உணவகத்திற்கு 45 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும், சரியான நேரத்தில் கட்டணம் செலுத்தாவிட்டால் அபராதத் தொகைக்கு 8% வட்டி செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், இந்த சம்பவமானது கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்துள்ளது. இதற்கு 11 மாத விசாரணைக்கு பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வெழுதிய Chat GPT.! படிக்காமலேயே மார்க என்ன தெரியுமா.?

மேற்கு வங்காளம் : OpenAI இன் ChatGPT நடைமுறைக்கு வந்ததிலிருந்தே தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இப்போது ChatGPT இன்…

6 hours ago

சிவ தாண்டவமாடும் பாலையா.! கவனம் ஈர்க்கும் ”அகண்டா 2” டீசர்..!

கர்நாடகா : இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகியுள்ள 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அசாத்திய மாஸ்…

7 hours ago

சென்னையில் திடீரென வெளுத்து வாங்கிய காற்றுடன் கனமழை.! சாய்ந்து விழுந்த மரங்கள்…

சென்னை : சென்னையின் திடீரென பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.…

7 hours ago

”விரைவில் தீர்வு கிடைக்கும்.., தொண்டர்களுக்காக எதையும் செய்வேன்” – பாமக நிறுவனர் ராமதாஸ்.!

சென்னை : சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சென்று கொண்டிருக்கும் வேலையில் பாமக உட்கட்சி…

8 hours ago

மதுரை-தூத்துக்குடி டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கலாம்.! தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன்…

8 hours ago

ஏ.ஆர். ரஹ்மான் கான்செர்ட் – ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு.!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய "மறக்குமா நெஞ்சம்" என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு…

8 hours ago