ட்விட்டர் அலுவலகத்தை மூடுவோம்… இந்திய அரசு கொடுத்த அழுத்தம்… முன்னாள் ட்விட்டர் சிஇஓ.!

Published by
Muthu Kumar

இந்தியாவில் ட்விட்டர் இயங்குதளத்தை மூடுவது தொடர்பாக அச்சுறுத்தல்கள் வந்தன முன்னாள் ட்விட்டர் சிஇஓ குற்றச்சாட்டு.

ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சி, இந்திய அரசு தங்கள் இந்திய ட்விட்டர் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், சொன்னதை செய்யாவிட்டால் அலுவலகத்தை மூட நேரிடும் என குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். பிரேக்கிங் பாயின்ட்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, டோர்சியிடம் வெளிநாட்டு அரசு கொடுத்த அழுத்தங்களுக்கு சில உதாரணம் கூறுமாறு கேட்கப்பட்டது.

அப்போது பேசிய டோர்சி, இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்தின் போது அரசை விமர்சிப்பவர்களின் தொடர்பான ட்விட்டர் கணக்கை பிளாக் செய்வதற்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன. மேலும் இந்த விஷயத்தில் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்கள், அவர்கள் சொல்வதை செய்யாவிட்டால் உங்கள் நிறுவன ஊழியர்களின் வீட்டில் சோதனை செய்வது, நாட்டில் ட்விட்டர் அலுவலகத்தி மூடுவது போன்ற அச்சுறுத்தல்கள் வந்தன என்று கூறினார்.

இவையனைத்தும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிலிருந்து வந்த அழுத்தங்கள் என்று தெரிவித்தார். டோர்சியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Published by
Muthu Kumar

Recent Posts

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

12 minutes ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

1 hour ago

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

2 hours ago

முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…

2 hours ago

”திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை” – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

என்னடா மகனே மூன்று சதத்தை மிஸ் பண்ணிட்ட…கில்லை கிண்டல் செய்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…

3 hours ago