Categories: இந்தியா

புல்லட் ரயில் பாதையில் மழை காலத்தை கையாள அதிநவீன கருவி.! அமைச்சரின் மாஸ்டர் பிளான்..

Published by
கெளதம்

புதுடெல்லி : ரயில்வே போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், மக்கள் ஒரு இடத்திலிருந்து எளிதாக மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு அதிவேமாக செல்லும் புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், மழை காலங்களில் புல்லட் ரயில்கள் இயங்கும் போது, அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘தானியங்கு மழைப்பொழிவு கண்காணிப்பு கருவியை’ பொருத்தப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிஉள்ளார்.

இது குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில், “புல்லட் ரயில் சேவைகளின் பாதுகாப்பான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக, தானியங்கி மழைப்பொழிவு கண்காணிப்பு அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, மேம்பட்ட கருவி அமைப்புடன் கூடிய மழை அளவீடுகளைப் பயன்படுத்தி மழைப்பொழிவு குறித்த நிகழ்நேரத் தகவலை வழங்கும்” என்று  தெரிவித்துள்ளார்.

அடிக்கடி மழை பெய்ய கூடிய வாய்ப்புள்ள பகுதிகளில், இந்த மழைப்பொழிவு கண்காணிப்பு அமைப்பு நிறுவப்படும். இந்த அமைப்பு ஒவ்வொரு மணிநேரம் அப்டேட் மட்டுமல்லாமல், 24-மணி நேரமும் மழைப்பொழிவை கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிலை நிலைமைகளுக்கு ஏற்ப ரயில் வேகத்தை சரிசெய்ய தேவையான நெறிமுறைகளை வழங்க உதவுகிறது.

புல்லட் ரயிலின் எதிர்பார்க்கப்படும் வேகமான 320 கிமீ வேகத்தைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு மிக முக்கியமானது, இதில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்று கூறிஉள்ளார். மேலும், சூரத் மற்றும் பிலிமோரா இடையேயான 50 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய முதல் கட்டம் ஆகஸ்ட் 2026 இல் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

வயநாடு : தொடரும் கனமழை…முண்டக்கையில் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவு!

கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…

5 minutes ago

பாஜகவில் இணைய போகிறாரா மீனா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…

29 minutes ago

என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட் -பாமக நிறுவனர் ராமதாஸ் திட்ட வட்டம்!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…

53 minutes ago

விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா! என்ன பாட்டு தெரியுமா?

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

1 hour ago

“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!

டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…

1 hour ago

நீலகிரி, கோவைக்கு இன்றும், நாளையும் ஆரஞ்ச் அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…

1 hour ago