Categories: இந்தியா

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? – தமிழிசை சவுந்தரராஜன் பதில்

Published by
பாலா கலியமூர்த்தி

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் வாயிலாக நலத்திட்டங்களின் செறிவூட்டலை அடைவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் பாகூர் கிழக்கு பஞ்சாயத்தில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, புதுச்சேரி முதல்வர் மக்களுக்கு என்ன திட்டம் கொண்டுவர நினைக்கிறாரோ, அவை அனைத்துக்கும் நான் ஒப்புதல் அளிக்கிறேன். பிரதமர் மோடி பல திட்டங்களை கிராம மக்களுக்காக வழங்கி வருகிறார். மருத்துவ காப்பீடு திட்டம், விவசாயிகளுக்கான பயிர் பாதுகாப்பு திட்டம், பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து திட்டம் உள்ளிட்டவைகளை கொடுத்து வருகிறார் என தெரிவித்தார்.

புயல் எச்சரிக்கையால் முதலமைச்சர் நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

இதன்பின், இந்தியாவிலேயே புதுச்சேரியில் மட்டும் தான் ரேஷன் கடைகள் இல்லாமல் உள்ளது. ரேஷன் கடையை எப்போது திறக்கப் போகிறீர்கள்? என ஆளுநரிடம் பெண்கள் கேள்வி எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதுகுறித்து, பிறகு பேசிக் கொள்ளலாம் என ஆளுநர் பதில் சொல்லாமல் சென்றார்.

இதன்பின் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து பிறகு தெரிவிப்பேன், இப்போது கூற முடியாது, அது சஸ்பென்ஸ் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார். மேலும், புதுச்சேரி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாகவும் பின்னர் அறிவிப்பேன் என்றும் ஆளுநராக இருப்பதால் அதுகுறித்து பேச முடியாது எனவும் கூறிய அவர், ஆளுநர் – முதல்வர் அமர்ந்து பேச வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது வரவேற்கத்தக்கது எனவும் குறிப்பிட்டார்.

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

3 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

3 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

4 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

5 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

6 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

6 hours ago