Categories: இந்தியா

எங்கள் வம்சத்தில் பிறந்த முதல் பெண்குழந்தை..! ஊரே அசந்து போகும் அளவிற்கு அட்டகாசமான வரவேற்பு கொடுத்த தந்தை..!

Published by
லீனா

மகாராஷ்டிராவில் தங்களது தலைமுறையில் பிறந்த முதல் பெண்குழந்தையை வரவேற்க அட்டகாசமான வரவேற்பு கொடுத்த தந்தை.

மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டம், ஷெல்காவான் பகுதியை சேர்ந்த தம்பதியினர் விஷால் – ஜரேகரின். இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், விஷாலுக்கு தங்களது குடும்பத்தில் பல தலைமுறைகளாக பெண் குழந்தை  இல்லை என்ற ஏக்கம் இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின்போது மனைவி அவரது அம்மா வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே 3 மாதத்திற்கு பின் அவர் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். தனது தலைமுறையில் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளதை வரவேற்கும் வண்ணம் தனது வீட்டிற்கு மனைவியையும்,  குழந்தையையும்  அழைத்து வரும்போது மாவட்டமே வியக்கும் வண்ணம் பல தடபுடலான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

அதன்படி அவர் தனது மாமியார் வீட்டிலிருந்து மனைவியை அழைத்து வரும்போது ஒரு லட்சம் ரூபாய் ஹெலிகாப்டரை வாடகைக்கு   எடுத்து அந்த ஹெலிகாப்டர்  தனது வீட்டிற்கு தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்து வந்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில் எங்கள் வீட்டிற்கு வாரிசாக வரும் முதல் பெண் குழந்தை என்னுடைய குழந்தை தான். அதனால் தான் எங்கள் வீட்டு மகளை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தோம் என தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

24 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

42 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

1 hour ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

16 hours ago