Categories: இந்தியா

மணிப்பூர் முதல்வர் திறந்து வைக்க இருந்த உடற்பயிற்சி கூடம் தீ வைத்து எரிப்பு.! நகரில் 144 தடை உத்தரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி

மணிப்பூர் முதல்வரின் வருகையை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு.

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஒரு கும்பல் முதல்வர் என் பிரேன் சிங்கின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நாசப்படுத்தி தீ வைத்து எரித்ததாகக கூறப்படுகிறது. மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் இன்று திறந்து வைக்கவிருந்த ஒரு திறந்த உடற்பயிற்சி கூடம் பகுதியளவு தீப்பிடித்து எரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஒதுக்கப்பட்ட காடுகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக பழங்குடியின தலைவர்கள் மன்றம் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மணிப்பூர் முதல்வர் கலந்துக்கொள்ள இருந்த கூட்டத்தில் இருந்த 100 நாற்காலிகளை மர்ம கும்பல் எரித்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, உள்ளூர் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

அதன்படி, இந்த சம்பவம் நடந்த இடத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மார்ச் மாதமும் மணிப்பூரில் உள்ள காங்போக்பியாட் காங்போக்பி நகரில் நடந்த அமைதிப் போராட்டம் வன்முறையாக மாறியது.

இந்த வன்முறையில் 5 பேர் பலியாகினர். மியான்மரை தளமாகக் கொண்ட தீவிரவாத அமைப்பு போராட்டத்தைத் தூண்டியதாக பிரேன் சிங் குற்றம் சாட்டினார். மாநிலத்தின் மலை மாவட்டங்களில் உள்ள சில நிலங்களை ஒதுக்கப்பட்ட காடுகள் அல்லது ஈரநிலங்கள் என அரசு தவறாக அறிவித்ததாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

3 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

4 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

4 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

5 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago