Categories: இந்தியா

மணிப்பூர் முதல்வர் திறந்து வைக்க இருந்த உடற்பயிற்சி கூடம் தீ வைத்து எரிப்பு.! நகரில் 144 தடை உத்தரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி

மணிப்பூர் முதல்வரின் வருகையை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு.

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஒரு கும்பல் முதல்வர் என் பிரேன் சிங்கின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நாசப்படுத்தி தீ வைத்து எரித்ததாகக கூறப்படுகிறது. மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் இன்று திறந்து வைக்கவிருந்த ஒரு திறந்த உடற்பயிற்சி கூடம் பகுதியளவு தீப்பிடித்து எரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஒதுக்கப்பட்ட காடுகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக பழங்குடியின தலைவர்கள் மன்றம் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மணிப்பூர் முதல்வர் கலந்துக்கொள்ள இருந்த கூட்டத்தில் இருந்த 100 நாற்காலிகளை மர்ம கும்பல் எரித்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, உள்ளூர் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

அதன்படி, இந்த சம்பவம் நடந்த இடத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மார்ச் மாதமும் மணிப்பூரில் உள்ள காங்போக்பியாட் காங்போக்பி நகரில் நடந்த அமைதிப் போராட்டம் வன்முறையாக மாறியது.

இந்த வன்முறையில் 5 பேர் பலியாகினர். மியான்மரை தளமாகக் கொண்ட தீவிரவாத அமைப்பு போராட்டத்தைத் தூண்டியதாக பிரேன் சிங் குற்றம் சாட்டினார். மாநிலத்தின் மலை மாவட்டங்களில் உள்ள சில நிலங்களை ஒதுக்கப்பட்ட காடுகள் அல்லது ஈரநிலங்கள் என அரசு தவறாக அறிவித்ததாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

20 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

38 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

1 hour ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

16 hours ago