‘இந்தியா’ கூட்டணியின் இலச்சினை இன்று வெளியீடு.!

Published by
கெளதம்

இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது மாநாடு மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட 26 கட்சிகள் பங்கேற்றுள்ள. இன்று நடைபெறும் இரண்டாவது நாள் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று இந்தியா கூட்டணியின் இலச்சினை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூட்டணி செயல் திட்டமும் வகுக்கப்பட உள்ளது.

பாட்னா, பெங்களூருவில் இந்தியா கூட்டணியின் 2 கூட்டங்கள் நடந்து முடிந்த நிலையில், மும்பையில் 3வது ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்

மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து திமுக உள்பட சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதனால், பாஜக அரசை வீழ்த்த இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டிவருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியின் இந்த 3வது ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

7 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

25 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

48 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago