இந்தியா

3 குழந்தைகள் இருப்பதை மறைத்த மேயர் பதவி நீக்கம்..!

Published by
லீனா

பீகாரில் 3 குழந்தைகள் இருப்பதை மறைத்து மேயராக பதவியேற்ற ராக்கி குப்தா பதவி நீக்கம். 

பீகாரில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் வைத்திருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என்பது சட்டமாகும். இந்த நிலையில், பீகார் மாநில தேர்தல் ஆணையம் (எஸ்இசி)  3 குழந்தைகள் இருப்பதை மறைத்த மேயரை பதவி நீக்கம் செய்துள்ளது.

 சமீபத்தில், பீகார் மாநில சப்ரா நகர் மேயராக ராக்கி குப்தா பதவியேற்றார். 2022 ஆம் ஆண்டு தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், ராக்கி குப்தா தனது இரண்டு குழந்தைகளைப் பற்றிய தகவல்களை மட்டும் அளித்து, தனது மூன்றாவது குழந்தை பற்றிய தகவலை மறைத்தார். தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதை மறைத்து மேயராக பதவியேற்றுள்ளார்.

சரணின் மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) தனது அறிக்கையில், ராக்கி குப்தா மற்றும் அவரது கணவர் வருண் பிரகாஷ் ஆகியோருக்கு மூன்றாவது குழந்தை இருப்பதாக பீகார் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தது. இருப்பினும், அந்த குழந்தை வருண் பிரகாஷின் உறவினர்களால் தத்தெடுக்கப்பட்டது என்று சரணின்  தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆனால், குழந்தையின் ஆதார் விவரங்களில் ராக்கி குப்தா மற்றும் வருண் பிரகாஷ் ஆகியோரின் பெயர்கள்  பெற்றோர்களாக உள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று குழந்தைகள் இருப்பது தெரியவந்ததையடுத்து, மேயர்  ராக்கி குப்தா  பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் புதிய மேயர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

4 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

4 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

5 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

5 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

6 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

8 hours ago