Categories: இந்தியா

உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ‘யுகே யுகீன் பாரத்’ இந்தியாவில் அமைக்கப்படும்..! பிரதமர் மோடி

Published by
செந்தில்குமார்

உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ‘யுகே யுகீன் பாரத்’ இந்தியாவில் அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் மாநாட்டு அரங்கு திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி  உரையாற்றினார். அவர் தனது உரையின் போது, உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ‘யுகே யுஜீன் பாரத்’ இந்தியாவில் விரைவில் அமைக்கப்படும் என்று கூறினார்.

இந்த அருங்காட்சியகம் விரைவில் டெல்லியில் கட்டப்பட உள்ளது. தற்போதுள்ள தகவலின்படி, இந்த அருங்காட்சியகம் கிட்டத்தட்ட 1.17 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இதில் ஒரு அடித்தளம், தரை தளம் மற்றும் இரண்டு கூடுதல் தளங்களில் சுமார் 950 அறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த அருங்காட்சியகம் ராஷ்டிரபதி பவனைச் சுற்றி வடக்கு மற்றும் தெற்குத் பகுதிகளுக்குள் அமைக்கப்படும். யுகே யுஜீன் பாரத் தேசிய அருங்காட்சியகம் 5,000 ஆண்டுகால இந்திய வரலாற்றை எடுத்துக்கூறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், இது பல்வேறு சகாப்தங்கள், துடிப்பான கலாச்சாரங்கள், விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் இந்திய அறிஞர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளின் பெருமையை எடுத்துக்காட்டும்.

இந்த அருங்காட்சியகம் மௌரியர்கள், குப்தர்கள் மற்றும் குஷானர்கள் போன்ற பண்டைய இந்திய பேரரசுகளுக்கு மரியாதை செலுத்துவதோடு மற்றும் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பின் போது மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

4 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

4 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

5 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

5 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

6 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

8 hours ago