Categories: இந்தியா

ஒடிசா ரயில் விபத்திற்கு இதுதான் காரணம்..! சிபிஐ முதற்கட்ட தகவல்..!

Published by
செந்தில்குமார்

ஒடிசா ரயில் விபத்திற்கு இண்டர்லாக்கிங் அமைப்பு அணைக்கப்பட்டிருந்ததே காரணம் என்று சிபிஐ முதற்கட்ட தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் 2ம் தேதி ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் பாஹாநாகா ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1000க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஒடிசா மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், பலர் வீடு திரும்பியதாகவும் தகவல் வெளியானது. மேலும், உயிரிழந்தவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காணப்படாமலும் இருக்கிறது.

இந்த விபத்துக்குறித்து பலவித சந்தேகங்கள் ஏற்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிஐ ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பாலசோர் மாவட்டம் பஹானகா ரயில் நிலையத்தில் 10 பேர் அடங்கிய குழு தங்கள் விசாரணையை தொடங்கியது.

கடந்த ஒரு வாரமாக சிபிஐ விபத்து நடந்த பகுதி மற்றும் அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில், தற்பொழுது ஒரு அதிர்ச்சி தகவல் சிபிஐ தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது. அதன்படி, ஒடிசா ரயில் விபத்து நேரிட்ட இடத்தின் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் இண்டர்லாக்கிங் அமைப்பு அணைக்கப்பட்டு இருந்துள்ளது.

கணினி மூலம் இயங்கும் இந்த இண்டர்லாக்கிங் அமைப்பை, பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் நிலைய அதிகாரி அணைத்துவிட்டு, கிரீன் சிக்னல் கொடுத்ததால் இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ தரப்பிலிருந்து முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, ரயில் நிலையத்தில் உள்ள உபகரணங்கள், பதிவு அறை மற்றும் ரிலே இன்டர்லாக்கிங் அமைப்பிற்கு சீல் வைத்துள்ளது என்றும் மறு அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு பயணிகள் அல்லது சரக்கு ரயிலும் நிலையத்தில் நிற்காது என்றும் தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை பிஆர்ஓ ஆதித்ய குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

10 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

11 hours ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

13 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

13 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

15 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

15 hours ago