Categories: இந்தியா

தனிப்பட்ட கேள்விகள்.? நாடாளுமன்ற குழு விசாரணையில் பாதியில் வெளியேறிய TMC பெண் எம்.பி.!

Published by
மணிகண்டன்

நாடாளுமன்ற மக்களவையில் அதானி, பிரதமர் மோடி குறித்து கேள்விகள் எழுப்ப பரிசுகள் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது தொழிலதிபர் ஹிராநந்தானி மக்களவைக்கு புகார் எழுதி இருந்தார். இந்த புகாரின் பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்.பி நிஷிகாந்த் துபேவும்  மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

மேலும் மஹுவா மொய்த்ரா மீது ,  அதிகாரபூர்வ நாடாளுமன்ற உறுப்பினர் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை பகிர்ந்து அதன் மூலம் கேள்விகளை பெற்றார் என்ற புகார் மற்றும், நாடாளுமன்ற மக்களவை தலைவரிடம் தெரிவிக்காமல் 15 முறை வெளிநாடு சென்றதாக எழுந்த புகார் மீதும் நாடாளுமன்ற ஒழுங்கு முறை குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதிகரிக்கும் காற்று மாசு.! டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

இதில் புகார் அளித்து இருந்த நிஷிகாந்த் துபேவிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி மஹுவா நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் அன்றைய தினம் தொகுதி வேலைகள் இருப்பதாக கூறி , நேற்று (நவம்பர் 2) நாடாளுமன்ற ஒழுங்கு முறை குழு முன்னர் விசாரணைக்கு ஆஜராகினர்.

விசாரணைக்கு ஆஜரான சிறுது நேரத்தில் அங்கிருந்து மஹுவா மொய்த்ரா பாதியில் வெளியேறினார். இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மஹுவா புகார் அளித்து உள்ளார்.

அதில், நாடளுமன்ற ஒழுங்கு குழு ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறது. அதன் தலைவர் வினோத் குமார் சோன்கர் தன்னிடம் அநாகரீகமாக, சில தனிப்பட்ட கேள்விகளைக் கேட்டதாகவும் அந்த புகாரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா குறிப்பிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஈரான் கொடுத்த எச்சரிக்கை…நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?

வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…

13 minutes ago

லண்டனில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவி செய்வோம்! உறுதியளித்த டாடா குழும தலைவர் சந்திரசேகரன்!

மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

3 hours ago

அடுத்து இந்த 2 இடம் தான் டார்கெட்..உடனே வெளியேறுங்க! அலர்ட் கொடுத்த இஸ்ரேல்!

இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…

3 hours ago

அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என நினைத்தேன்! விமான விபத்து குறித்து சந்திரசேகரன்!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…

4 hours ago

ராமாபுரம் விபத்து : L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம்!

சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…

4 hours ago

ஈரானில் இந்திய மாணவர்கள் 5 பேர் காயம்? 110 பேர் பாதுகாப்பாக டெல்லி வருகை!

தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…

5 hours ago