தொற்றுநோயின் இரண்டாவது அலை புதிய சவால்களைக் கொண்டுவந்துள்ளது யோகி ஆதித்யநாத்- பிரதமர் மோடிக்க நன்றி
லக்னோ மாநிலத்தில் 300 ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க தனது அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை (மே 10) தெரிவித்தார்
மேலும் கோவிட்-19 தொற்றுநோயின் 2-வது அலையைச் சமாளிக்க ரயில்வே மற்றும் விமானப்படை உதவியுடன் மற்ற மாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன் சப்ளை செய்ய முடிந்தது என்றும் இதற்காக மோடி அரசுக்கு நன்றி எனவும் அவர் கூறினார். இதன்மூலம் நாங்கள் 1000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை மாநிலம் முழுவதும் வழங்கினோம், மேலும் மாநிலத்தில் புதிய ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க வேண்டிய அவசியம் தற்போது உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அனைத்து மாவட்டங்களுக்கும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும் வழங்கியுள்ளோம். முதல் கட்டத்தில், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் செறிவூட்டிகளும் வழங்கப்படும், ”என்றார்.
முன்னதாக ஆதித்யநாத் மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்று கூறியிருந்தார், மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக பொய்யாக புகார் கூறும் தனிநபர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அவர் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் ‘கொரோனா ஊரடங்கு உத்தரவு’ மே 17 அன்று காலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…