மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க அமித்ஷா தயார்.! மத்திய அமைச்சர்கள் கருத்து.!

Published by
மணிகண்டன்

மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க அமித்ஷா தயார் என மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஸ்மிருதி இராணி கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றம் தொடங்கியதில் இருந்து ஒத்திவைப்பு, முடக்கம் எனும் செய்திகள் தான் வெளியாகி வருகின்றன .

மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ‘ மணிப்பூர் விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விவாதிப்பார். அப்போது மணிப்பூர் போல, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என கூறினார்.

அதே போல, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்ற வளாகத்தில் செய்டியாளர்களிடம் கூறுகையில், “மணிப்பூர் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவாதத்திற்கு தயார் என்று கூறியுள்ளார். மணிப்பூர் பிரச்சனையை முன்னெடுக்கும் எதிர்க்கட்சிகள் உண்மையை ஏன் விரும்பவில்லை. மணிப்பூர் விவகாரத்தில் விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் தான் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

14 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

14 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

15 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

15 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

16 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

18 hours ago