Categories: இந்தியா

இன்று முதல் அமலுக்கு வந்த புதிய தொலைத்தொடர்பு சட்டங்கள்.! விவரங்கள் இதோ….

Published by
மணிகண்டன்

டெல்லி: பல்வேறு தொலைத்தொடர்பு விதிமுறைகள் மற்றும் மாற்றங்கள் கொண்ட ‘புதிய தகவல் தொலைத்தொடர்பு துறை விதிகள் 2023’ இன்று (ஜூலை 26) அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளானது, இந்திய தந்தி சட்டம் 1885 மற்றும் இந்திய வயர்லெஸ் டெலிகிராப் சட்டம் 1933 ஆகிய இரண்டிலும் மாற்றம் கொண்டு வந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று (ஜூன் 26) முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளானது, தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவு உள்ளிட்ட ஏதேனும் காரணங்களால் நெட்வொர்க்கின் கட்டுப்பாடு மற்றும் அதன் நிர்வாகத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ள இந்த சட்டம் அனுமதிக்கும்.

புதிய புதிய சட்டத்தின்படி, மக்கள் தங்கள் பெயரில் அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வாங்கிக்கொள்ள அனுமதிக்கிறது.  இருந்தாலும் , ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட சில பகுதிகளில் 6 சிம் கார்டுகள் வரை மட்டுமே வாங்க அனுமதிக்க முடியும். அதிகபட்ச வரம்பை தாண்டிச் சென்றால், முதல் முறை 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் , அதைத் தொடர்ந்து மீறினால் 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கள் அடையாள ஆவணங்களை தவிர்த்து வேறு ஒருவரின் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி, மற்றவர்களை ஏமாற்றி இருந்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும்.

பயனரின் அனுமதியின்றி அனுப்பப்படும் வணிகச் செய்திகள் தொடர்புடைய புகார்களுக்கு சம்பந்தப்பட்ட ஆபரேட்டருக்கு 2 லட்ச ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும்.

தனியாருக்கு சொந்தமான இடங்களில் மொபைல் டவர்களை நிறுவவோ அல்லது தொலைத்தொடர்பு கேபிள்களை அமைக்கவோ உரிமையாளரின் அனுமதியோடு டெலிகாம் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அரசு அனுமதிக்கப்பட்டுள்ளது.

தேசத்தின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கும் நிலைகளிலோ, அவசரகால சூழ்நிலைகளின் போதோ ​இரு நபர்களுக்கு இடையேயான செய்திகளின் பரிமாற்றங்களைத் தடுக்கவும் அதனை கட்டுப்படுத்தவும் அதிகாரம் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகிறது.

செய்தி நோக்கங்களுக்காக மாநில மற்றும் மத்திய அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் அனுப்பும் செய்திகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இருந்தும், சில சமயம் அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்களின் அழைப்புகள் மற்றும் செய்திகள் கூட தேவை இருப்பின் கண்காணிக்கப்படலாம். அவர்களின் செய்தி பரிமாற்றம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் காணப்பட்டால் அதனை தடுக்கவும் அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என பல்வேறு தகவல் தொலைத்தொடர்பு விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

12 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

13 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

13 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

13 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

14 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

14 hours ago