Chennai airport [Image source : Indian Express]
கனமழை காரணமாக சென்னையில் 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால் இத்தனை நாள் வாட்டி வதைத்து வந்த கோடை வெப்பத்தில் இருந்து சற்று குளிர்ச்சி கிடைத்ததாக மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். இருந்தாலும் சென்னையில் ஓரிரு இடங்களில் நீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
ஏற்கனவே ,சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தற்போது வெளியான தகவலின்படி, சென்னையில் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த 10 விமானங்கள் பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. குறிப்பாக துபாய், அபுதாபி, லண்டன், சார்ஜா, சிங்கப்பூர் உளிட்ட நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமிட்டு பறந்தன. அதன் பிறகு தான் பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
சென்னையில் இருந்து டெல்லி, அந்தமான், துபாய், லண்டன் உள்ளிட்ட 9 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் கனமழை காரணமாக தாமதமாக புறப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…