Annamalai BJP EB [Image-FB/@annamalai]
திமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார துறையில் ரூ.397 கோடிக்கு மிகப்பெரிய ஊழல், நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக ஆட்சிக்கு வந்தபின், ட்ரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் ரூ.397 கோடிக்கு மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ட்ரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் ஒப்பந்தத்தில் சந்தை மதிப்பை விட அதிக தொகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தை மதிப்பை விட 4 லட்சத்துக்கும் மேல் அதிக விலைக்கு ட்ரான்ஸ்பார்மர்கள் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதன்மூலம் கடந்த 2 ஆண்டுகளில் மின்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அமைச்சர் ஆகியோர் சேர்ந்து, கிட்டத்தட்ட 397 கோடி ரூபாய் அளவில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் அமைச்சருக்கும், மின்வாரிய தலைமை அதிகரிக்கும் தெரியாமல் இந்த ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை, இதனால் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…