சென்னையில் உள்ள சவுக்கார்பேட்டையை சார்ந்த பிரியா அகர்வால் என்ற மாணவி தான் நண்பர்களுடன் வடபழனி வந்து உள்ளார்.அப்போது தனது செல்போனில் உள்ள உபேர் ஈட்ஸ் செயலி மூலம் பிரியாணி ஒன்றை ஆர்டர் செய்து உள்ளார். அதற்காக தனது கணக்கில் இருந்து 76 ரூபாய் செலுத்தி உள்ளார்.
பின்னர் செய்து நேரம் கழித்து பிரியா அகர்வால் செல்போனிற்கு ஆர்டர் செய்த பிரியாணி ரத்தாகி விட்டதாக ஒரு குறுஞ்செய்தி ஓன்று வந்தது.ஆனால் பிரியா அகர்வால் செலுத்திய பணம் திரும்பி வராததால் கூகுளில் உபர் ஈட்ஸ் செயலியின் சேவை மைய எண்ணை தேடியுள்ளார்.
அப்போது கூகுளில் பதிவாகி இருந்த மோசடி நபர்களின் போலியான சேவை எண் என்பதை தெரியாமல் பிரியா அகர்வால் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.பின்னர் அவர்கள் 76 ரூபாய் சிறிய தொகையாக இருப்பதால் திருப்பி அனுப்புவது சிரமம் எனவே நீங்கள் ஐயாயிரம் ரூபாய் அனுப்பினால் மொத்தமாக அனுப்பி வைக்கிறோம் என கூறி உள்ளனர்.
அவர்களின் பேச்சை கேட்டு பிரியா அகர்வாலும் கூகுள் பே செயலி மூலம் ஐயாயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். ஆனால் பணம் வந்து சேரவில்லை என பிரியா அகர்வால் கூற தற்போது வரும் ஓடிபி எண்ணை கூறினால் பணம் கணக்கில் வந்து சேரும் என கூற பிரியா அகர்வாலும் ஓடிபி எண்ணை கூறியுள்ளார்.
மீண்டும் பணம் வரவில்லை என பிரியா அகர்வால் கூற அந்த மோசடி நபர்கள் மீண்டும் வரும் ஓடிபி எண்ணை கூறினால் பணம் கணக்கில் வந்து சேரும் என கூறி 8 முறை ஓடிபி எண்ணை அனுப்பி உள்ளனர்.
ஒவ்வொரு முறையும் பிரியா அகர்வால் ஐயாயிரம் அனுப்ப மொத்தமாக 40 ஆயிரம் ரூபாயை அந்த மோசடி நபர் தங்கள் கணக்கில் மாற்றி கொண்டு இணைப்பை துண்டித்து உள்ளனர். பிறகுதான் அகர்வாலுக்கு தெரிந்தது தான் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டதாக இதை தொடர்ந்து வடபழநி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.அந்த மர்ம நபர்களை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…