திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகே உள்ள கிராமத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.அவருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
அந்த கிராமத்தில் மழை பெய்வதற்காக அர்ஜுனன் தவசு என்ற நாடகம் 3 நாட்கள் பிரம்மாணடமாக நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்த பெண் இரண்டு நாட்கள் அந்த நாடகத்தை பார்த்துள்ளார்.
பின்னர் மூன்றாவது நாள் அந்த நாடகத்தை பார்க்க தூங்கிக்கொண்டிருந்த அந்த 7 வயது சிறுமியை வாசலில் படுக்க வைத்துவிட்டு நாடகம் பார்க்க சென்றுள்ளார்.சுமார் 1மணி நேரம் கலித்து அந்த சிறுமி அலுத்து கொண்டே அம்மாவை தேடி நாடகம் நடக்கும் இடத்திற்கு வந்துள்ளது.
பின்னர் குழந்தை அலுத்து கொண்டு வந்ததை பார்த்த அந்த பெண் குழந்தையிடம் சென்றுள்ளார்.அப்போது சிறுமியின் துணியெல்லாம் ரத்தமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் உடனே மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து கொண்டு சென்றுள்ளார்.அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர்.
அதன் பிறகு அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை சீண்டிய கொடூரனை தேடி வருகின்றன.
மேலும் சிறுமியின் உடல்நிலை மோசமாகிய காரணத்தால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…