தேசிய கட்சியோடு கைகோர்க்கும் நடிகர் விஜய்.? மறுப்பு தெரிவித்த முக்கிய நிர்வாகி.!

Published by
மணிகண்டன்

அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னர் தமிழக அரசியல் வட்டாரம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிமுக தலைவர்களை ஒரே கூட்டணியில் இருந்த பாஜகவினரே தொடர்ந்து விமர்சித்து வந்ததால் , பாஜவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் தேசிய அளவில் பாஜக தலைமையில் அமைந்து இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில்(NDA) இருந்தும் வெளியேறுவதாக அறிவித்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதான கூட்டணி கட்சியாக இருந்த அதிமுகவின் ‘கூட்டணி முறிவு’ முடிவு , தமிழக பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.  இந்த கூட்டணி தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று தேசிய தலைவர்களிடம் விளக்கம் கொடுத்துவிட்டு வந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் ஒரு செய்தி நிறுவனம், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை (NDA)  வலுப்படுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும், இதில் நடிகர் விஜயின் , மக்கள் இயக்கதிடமும் ஆதரவு கேட்டுள்ளார் என்றும், அண்ணாமலையின் கூட்டணி முறிவு முடிவுக்கும், அவரது நேர்மைக்கும் விஜய் பாராட்டு தெரிவித்தது போலவும் செய்திகளை வெளியிட்டது.

இதனை அடுத்து, விஜய் பாஜகவுடன் இணைந்து தமிழக அரசியலில் களமிறங்க உள்ளாரா என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த செய்தியை மறுத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் விளக்கத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், இன்றைய (அக்டோபர் 9) <தனியார் செய்தி நிறுவனம்> நாளிதழில் தளபதி விஜய் அவர்களது பெயரை இரண்டு அரசியல் கட்சிகளோடு அவ்வாறு தொடர்புபடுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியிடப்படுள்ள செய்தி எள்ளளவும் அறமற்ற பொய்யான செய்தி. தளபதி விஜய் அவர்களது பெயரை உள்நோக்கத்தோடு அவரது அரசியல் நிலைப்பாடு என்று தொடர்புபடுத்தி துளியும் உண்மையில்லாத தகவல்களை கொண்டு

<தனியார் செய்தி நிறுவனம்> நாளிதழில் வெளியாகியுள்ள இந்த பொய்யான செய்திக்கு தளபதி அவர்கள் சார்பாக அதிகாரப்பூர்வமாக மறுப்பை தெரிவித்துக்கொள்கிறேன் என அதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்,
Published by
மணிகண்டன்

Recent Posts

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

20 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

50 minutes ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

4 hours ago