AIADMK Chief Secretary Edapadi Palanisamy [Indian Express]
கடந்த 2ஆண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநில மாநாடு குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், அண்மையில், சென்னை எழும்பூர் அரசு அரசு மருத்துவமனையில் ராமநாதபுரத்தை சேந்த தஸ்தகீர் – அஜீஷா தம்பதியின் ஒன்றரை வயது மகனுக்கு ஒரு கை அகற்றப்பட்டது குறித்து பேசினார். அவர் கூறுகையில், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுத்துவத்துறை சீரழிந்துவிட்டது என குறிப்பிட்டார்.
மேலும், மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் ஒன்றரை வயது குழந்தையின் கை பறிபோயுள்ளது என தமிழக மருத்துவத்துறை பற்றி விமர்சனம் செய்து இருந்தார் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…