ADMK Chief Secretary Edappadi Palanisamy
நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஆறு மாத காலமே உள்ள காரணத்தால் பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளன. கூட்டணி விவகாரங்கள், தொகுதி பங்கீடுகள் குறித்த ஆலோசனைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) இந்தியா (I.N.D.I.A) கூட்டணி என பாஜக மற்றும் காங்கிரஸ் தங்கள் கூட்டணி வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வருகிறது.
இந்த சமயத்தில் நாளை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க உள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டுதொடர் நடைபெற உள்ளதால் அந்த சிறப்பு கூட்டத்தில் தீர்மானங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் மத்திய அரசின் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய "மறக்குமா நெஞ்சம்" என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு…
மேகாலயா : இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி என்ற தம்பதியினர் கடந்த மே 11ம் தேதி…
டெல்லி : இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.…
கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர்…
சென்னை : தவெகவில் இன்று புதிதாக இணைந்த முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ்-க்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கி…