இந்த மாதம் (ஏப்ரல்) அரசு அலுவலகங்கள், மற்றும் பள்ளி கல்லூரிகள். வங்கிகள் என அனைவருக்கும் 4 நாட்கள் விடுமுறை கிடைத்திருந்தது. குறிப்பாக வங்கிகளுக்கு பெரும்பாலும் நிறைய நாட்களில் விடுமுறை கிடைத்தது. பள்ளி கல்லூரிகள் வங்கிகள் உட்பட 4-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, 7-ஆம் தேதி புனித வெள்ளி, 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு. 22-ஆம் தேதி ரம்ஜான் ஆகிய 4 நாட்களிளை சேர்த்து விடுமுறை கிடைத்தது.
இந்த விடுமுறை தினங்கள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை வந்ததால் மக்கள் வார இறுதியோடு சேர்த்து கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் , வரும் மாதமான ‘மே’ மாதம் ஒரு நாள் மட்டும் தான் விடுமுறை உள்ளது. அதை தவிர அடுத்த மாதம் ஒரு விடுமுறை கூட இல்லை.
அதன்படி, வரும் மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினம் என்பதால் அதனை முன்னிட்டு அந்த 1 நாள் மட்டும் தான் எல்லாருக்கும் விடுமுறை. அந்த தேதி தவிர மே மாதத்தில் ஒரு பொது விடுமுறை கூட கிடையாது. இதனால், வேலைக்கு செல்லும் பணியாளர்கள் சற்று சோகத்தில் உள்ளனர்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து வரும் மே மாதம் முழுவதுமே விடுமுறை என்பதால் மாணவர்கள் மட்டும் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா : இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகியுள்ள 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அசாத்திய மாஸ்…
சென்னை : சென்னையின் திடீரென பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.…
சென்னை : சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சென்று கொண்டிருக்கும் வேலையில் பாமக உட்கட்சி…
தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய "மறக்குமா நெஞ்சம்" என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு…
மேகாலயா : இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி என்ற தம்பதியினர் கடந்த மே 11ம் தேதி…