Arikomban [Image source : twitter/AVS Namboodiri
முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது அரிக்கொம்பன்.
கடந்த மாதம் கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் சுற்றி திரிந்த அரிக்கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் தமிழக எல்லையில் விட்ட நிலையில், இந்த யானை தேனி, கம்பம் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்தது. இந்த யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து, யானையை பிடிக்க வனத்துறையினர் கடந்த சில வாரங்களாக முயன்று வந்தனர். கோடை மழை பெய்து வந்ததால் யானையை பிடிக்கும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி நேற்று பிடித்தனர். தற்போது அரிக்கொம்பன் யானை பிடிப்பட்டதையடுத்து, ஏற்கனவே உத்தரவிட்டிருந்த 144 தடை நீக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிடிப்பட்ட அரிக்கொம்பன் யானை நெல்லை மாவட்டம் முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள, மேல கோதையாறு பகுதியில் வனத்துறையினால் விடப்பட்டது.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…