Central railway station in Chennai. (Source: Wikimedia Commons)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாக தகவல் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாநில கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 2 மாதத்திற்கு முன், இதே ரயில் நிலையத்திற்கு மிரட்டல் வந்த அதே எண்ணில் இருந்து மீண்டும் மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது…