உதய் மின்திட்டம்..அதிமுக தான் காரணம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

அதிமுக ஆட்சி காலத்தில் கையெழுத்தான ‘உதய் மின்திட்டம்’ தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழகத்தில் வரும் ஒன்றாம் தேதி முதல் வணிகம் மற்றும் சிறு குறு நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. இது குறித்து நேற்று திருச்சியில் செய்தியாளர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து இருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், தற்போது மின்வாரியம் பிரச்சனைகளை சந்தித்து வருவதற்கு காரணம் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது உதய் மின் திட்டத்திற்கு அதிமுக அரசு கையெழுத்திட்டது தான் காரணம். அதிமுக ஆட்சியில் தான் மின்கடனமானது செங்குத்தாக உயர்ந்து இருந்தது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிமுக ஆட்சியின் போது தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வாக இருந்தது என கடுமையாக விமர்சித்து இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும், வீட்டு இணைப்புக்கு எந்தவித கட்டண உயர்வும் இருக்காது. அதேபோல் இலவச மின்சார சலுகைகளும் தொடரும். வேளாண் பயன்பாடுகள், குடிசைகளுக்கு இலவச இணைப்புகள், 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகள் என அதில் எந்த மாற்றமும் இருக்காது.

மத்திய அரசின் விதிப்படி 4.7 விழுக்காடு மின்கடனத்தை அதிகரிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் தற்போது 2.12 விழுக்காடாக அதனை குறைத்து. அந்த தொகையையும் மானியமாக அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது. எனவே, வீடு இணைப்புகளுக்கு எந்தவித கட்டண உயர்வும் நிச்சயமாக இருக்காது. வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே 13 முதல் 21 பைசா வரை உயர்வு இருக்கும் என மின் கட்டண உயர்வு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து உள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

11 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

11 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

12 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

12 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

13 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

15 hours ago