தமிழ்நாடு

செங்கல்பட்டில் தனியார் காப்பகத்தில் பாலியல் தொல்லை என புகார்…! காப்பக உரிமையாளர் உட்பட 2 பேர் கைது..!

Published by
லீனா

 தனியார் காப்பகத்தில் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், காப்பக உரிமையாளர் வீரமணி உட்பட 2 பேர் கைது.

செங்கல்பட்டு மாவட்டம் பனங்காட்டுப்பாக்கத்தில் தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் அன்பகம் காப்பக உரிமையாளர் வீரமணி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் காப்பகத்தில் இருந்த 37 பெண்கள் உட்பட 59 பேர் மீட்கப்பட்டனர். செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத், காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உள்ளிட்டோர் காப்பகத்திற்கு நேரில் சென்று விசாரணை  மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், காப்பகத்தில் இருந்த மன வளர்ச்சி குன்றிய பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது விசாரணையில் உறுதியானது. மேலும், அரசு புறம்போக்கு நிலத்தில் காப்பகம் செயல்பட்டு வருவதால் சீல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

2 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

3 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

4 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

6 hours ago