CPIM State Secretory Balakrishnan meet DYFI Member Periyasamy [Image source : Twitter/@tncpim]
லாட்டரி விற்பனை கும்பலால் தாக்கப்பட்ட DYFI மாவட்ட செயலாளரை மருத்துவமனையில் CPM மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தித்தார்.
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் அப்பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) மாவட்ட செயலாளராக பொறுப்பில் உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு கருங்கல்பட்டி , தாதகாப்பட்டி கேட் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட், கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் விற்கப்படுவதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து எதிர்ப்பு பலகையையும் வைத்துள்ளார். புகாரின் பெயரில் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியதாக தெரிகிறது.
இதனை அடுத்து, நேற்று முன்தினம் தாதகாப்பட்டி கேட் பகுதி அருகே தனது வாகனத்தில் பெரியசாமி வந்து கொண்டு இருந்த போது வந்த மர்ம கும்பல் அவரை தடுத்து பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளது. இதனை அடுத்து அவர் அங்கிருந்து தப்பி அருகில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்து உயிர்பிழைத்தார். பின்னர் அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் பெரியசாமியை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
லாட்டரி சீட்டு விற்கும் கும்பலால் தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனை சிகிச்சையில் இருக்கும் DYFI மாவட்ட செயலாளர் பெரியசாமியை , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…