தமிழ்நாட்டில் பொது அமைதியை சீர்குலைக்க கூடாது…உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.!!

Published by
பால முருகன்

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாக குற்றச்சாட்டின் பெயரில் யூடியூபர் மணீஷ் காஷ்யப்க்கு எதிராக தமிழ்நாடு அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்கள்.

இதனையடுத்து, மணீஷ் காஷ்யப் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை  தள்ளுபடி செய்ய வேண்டும், ரத்து செய்ய வேண்டும் என்று கூறியும், பல்வேறு இடங்களில் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறிக்கை ஒரே இடத்தில் மாற்ற வேண்டும் என்று  கோரிக்கை வைத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு  வந்தபோது,  மணீஷ் காஷ்யப் தொடர்ச்சியாக இத்தகைய தகவல்களை வேண்டுமென்றே பரப்பி இருக்கிறார் என்பதை தமிழ்நாடு அரசு சார்பில்  கூறியுள்ளனர். இதைப்போலவே, பிகார் மாநில அரசும் அதேதான் கூறியிருந்தார்கள்.

இதனையடுத்து, அவரது மனுக்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு அறிவுறுத்தலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமானது குறிப்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  அமைதியாக இருக்கும் மாநிலமான தமிழ்நாட்டில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் எந்த ஒரு விஷயத்தையும் பதிவிட கூடாது எனவும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

15 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

15 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

16 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

16 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

17 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

19 hours ago