Minister Ponmudi [File Image]
திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, நிர்வாகிகள், தொண்டர்கள் அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு வருகை.
சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு நுங்கப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்று கிட்டத்தட்ட 7 மணிநேர தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இன்று மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை இல்லத்தில் பொன்முடியுடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, ரகுபதி, கேஎன் நேரு, சி.வி.கணேசன், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பொன்முடியுடன் சந்தித்துள்ளது.
நேற்று அமைச்சர் பொன்முடியுடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதனால் அமலாத்துறையின் வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள நேரில் ஆலோசனை வழங்கினார் வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ. மேலும், திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, நிர்வாகிகள், தொண்டர்கள் அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு சென்றுள்ளனர். இக்கட்டான தருணத்தில் நாங்கள் துணை நிற்போம் என்று பொன்முடிக்கு அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.
இதனிடையே, அமைச்சர் பொன்முடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர், துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். பாஜகவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…