death [Imagesource : Theindianexpress]
கண்ணெதிரே காதலன் கொலை செய்யப்பட்டதால், காதலி தூக்கிட்டு தற்கொலை.
கோவை மாவட்டம் சுந்தராபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் பிரசாந்த். இவர் தனியார் நிறுவனத்தில் லோடுமேன் ஆக வேலை செய்து வருகிறார். பிரசாந்த் வசந்த நகர் பகுதியை சேர்ந்த தன்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், ஆரம்பத்தில் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், திங்கள்கிழமை தான்யா பிறந்தநாளன்று நள்ளிரவில் வாழ்த்து கூறுவதற்காக பிரசாந்த் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.12 மணியளவில் அவர் வீட்டின் கதவை தட்டியபோது தன்யாவின் உறவினர் மற்றும் அவரது தந்தை இருவரும் கதவை திறந்துள்ளனர்.
பிரசாந்த் குடிபோதையில் இருந்ததை பார்த்த தன்யாவின் உறவினர் விக்னேஷுக்கும் பிரசாந்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் பிரசாந்த் விக்னேஷை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் அங்கிருந்த கத்தியை எடுத்து பிரசாந்தை குத்தியுள்ளார்.
இதனையடுத்து பிரசாந்தை அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தன்யாவின் உறவினரான கால் டாக்ஸி டிரைவர் விக்னேஷ் (29), மற்றும் அவரது தந்தை மகாதேவன் (40) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் காதலனை வெட்டி கொலை செய்ததால் மனம் உடைந்த காதலி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர், தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…