[FILE IMAGE]
திருமண வரன் பார்க்கும் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமண தகவல் இணையதளம் மோசடிகளில் பெரும்பாலும் பெண்களே ஏமாற்றப்படுகின்றனர். திருமண தகவல் இணையதளங்களை கட்டுப்படுத்த என சட்டமோ, விதிகளோ உருவாக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி டீக்காராமன் தெரிவித்துள்ளார்.
எனவே, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும் என்ற விதி வகுக்க வேண்டும் என்றும் ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும் என விதி இருந்திருந்தால் மோசடிகள் தடுக்கப்படும் எனவும் நீதிபதி கூறியுள்ளார். திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய சக்கரவர்த்தி என்பவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பெண் டாக்டரை திருமணம் செய்வதாக 80 பவுன் நகை, ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சக்கரவர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
வயது முதிர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் விவாகரத்து ஆனவர்களை குறி வைத்து சக்கரவர்த்தி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. 17க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதால் முன்ஜாமீன் தரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…