குழந்தை வெள்ளையாக பிறந்ததால் மனைவியை தலைவானியை வைத்து அமுக்கி கொன்ற கணவர்!

Published by
Sulai

கடலூர் மாவட்டத்தில் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜன்.இவரது மனைவி அமலா ஆவார்.இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 5 மாதத்தில் கைக்குழந்தை ஒன்று உள்ளது.

மேலும் ராஜன் அடிக்கடி அமலாவிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.மேலும் குழந்தை வெள்ளையாக இருப்பதால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து சித்ரவதை செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டிற்குள் இருந்து குழந்தை அழுகிற சத்தம் கேட்டுள்ளது.வெகு நேரம் ஆகியும் குழந்தை அழுகை நிற்காமல் கேட்டுக்கொண்டிருந்தாள்,அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டிற்குள் ராஜனையும் காணவில்லை.அமலா வீட்டில் படுத்திருந்துள்ளார்.அவரை அக்கம்பக்கத்தினர் எழுப்பியுள்ளனர்.ஆனால் அவர் எழுந்திராமல் இருந்துள்ளார்.

பின்பு அவர் இறந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் அமலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை தலைவாணியை வைத்து அமுக்கி யாரோ கொலை செய்ததை உறுதி செய்துள்ளனர்.

இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.ஆனால் அவரது கணவர் ராஜன் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு குழந்தை வெள்ளையாக இருந்ததால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது.

அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

10 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

11 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

11 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

14 hours ago