PMK leader Anbumani Ramadoss. [File Image] Photo Credit: The Hindu
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் கூட தகுதியாக கிடைக்கவில்லையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி 2.0 விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், நானும் கிரிக்கெட் பார்ப்பேன், எனக்கும் கிரிக்கெட் பிடிக்கும், அதுவும் நானும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதரவாளன் தான்.
எனக்கும் தோனியை பிடிக்கும், தோனிக்கு விசில் போடு என்று கூறி மேடையில் விசில் அடித்தார். ஆனால், அந்த அணியில் ஒரு தமிழன் கூட இல்லாமல் இருப்பது நிச்சயம் வருத்தம் தான் என தெரிவித்தார். 20 வீரர்கள் இருக்கிறார்கள், அதில் ஒரு தமிழனாவது இருந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எல்லாரும் ஆதரவு தருகிறோம், பேரிலேயே சென்னையை வைத்துக்கொண்டு தமிழக வீரர்கள் இல்லாமல் இருப்பது என்ன நியாயம், வேதனையாகத்தான் இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் கூட தகுதியாக உங்களுக்கு கிடைக்கவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையை சார்ந்தவர்கள் கூட சென்னை அணியில் உள்ளனர், ஆனால் தமிழர்கள் இல்லாததுதான் எனக்கு வருத்தமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…