Sudhakar, Additional commissioner of transport [File Image]
சென்னையில் இன்று நம்ம ஹெல்மெட் எனும் பெயரில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் கலந்துகொண்டு வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கினார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர், ஹெல்மெண்ட் அணியாமல் தான் தற்போது அதிக விபத்து ஏற்படுகிறது. அதனை கட்டுப்படுத்த தான் நம்ம ஹெல்மெட் என்னு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நாம் எப்படி சட்டை போடுகிறோமோ, அது போல தான் ஹெல்மெட் போடுவதும். நிறைய பேர் தற்போது ஹெல்மெட் போட ஆரம்பித்து விட்டனர். இது நம்ம உயிர், நம்ம ஹெல்மெட். எங்கள் கனவு சென்னையில் விபத்து விகிதம் குறைவு என்பது தான்.
இன்னைக்கு ஹெல்மெட் அணிவது எல்லாரும் கடைபிடித்து வருகிறார்கள். பல இரு சக்கர விபத்துக்களை பார்க்கிறோம், அவர்கள் எல்லாம் கூறுவது ஹெல்மெட் போட்டு இருக்கலாம், ஹெல்மெட் பிளாக் மாட்டி இருக்கலாம் என கூறுவது தான். ஏன், எங்க அப்பாவை இழந்தது கூட விபத்தில் தான். அப்போது தான் எனக்கும் ஹெல்மெட் முக்கியத்துவம் புரிந்தது என சென்னை கூடுதல் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் உருக்கமாக பேசினார்.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…