இபிஎஸ் குறித்து பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதிப்பு – ஐகோர்ட் உத்தரவு

Published by
பாலா கலியமூர்த்தி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் சொல்லித்தான் எனது சகோதரர் கனகராஜ் சில காரியங்களை செய்ததாகவும், கனகராஜ் சகோதரர் தனபால் அண்மைய காலமாக செய்தியாளர் சந்திப்பின்போது கூறி வருகிறார். மேலும், எனது சகோதரர்  கொலை செய்யப்பட்டார் என்றும் கோடநாடு குறித்து வெளியில் பேச கூடாது என மிரட்டல் வருவதாக கூறி, எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பல்வேறு பரபரப்பான தகவலை தெரிவித்திருந்தார்.

இந்த சமயத்தில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி பேச கார் ஓட்டுநர் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனது செல்வாக்கை குறைக்கும் வகையில் தனபால் பேசி வருகிறார்.

கோடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ரூ.1.10 கோடி நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடக்கோரியும் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக வழக்கு தொடர எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜனின் சகோதரர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடக்கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தனபால் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை அக்.10ம் தேதி ஒத்திவைத்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வெழுதிய Chat GPT.! படிக்காமலேயே மார்க என்ன தெரியுமா.?

மேற்கு வங்காளம் : OpenAI இன் ChatGPT நடைமுறைக்கு வந்ததிலிருந்தே தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இப்போது ChatGPT இன்…

9 hours ago

சிவ தாண்டவமாடும் பாலையா.! கவனம் ஈர்க்கும் ”அகண்டா 2” டீசர்..!

கர்நாடகா : இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகியுள்ள 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அசாத்திய மாஸ்…

10 hours ago

சென்னையில் திடீரென வெளுத்து வாங்கிய காற்றுடன் கனமழை.! சாய்ந்து விழுந்த மரங்கள்…

சென்னை : சென்னையின் திடீரென பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.…

11 hours ago

”விரைவில் தீர்வு கிடைக்கும்.., தொண்டர்களுக்காக எதையும் செய்வேன்” – பாமக நிறுவனர் ராமதாஸ்.!

சென்னை : சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சென்று கொண்டிருக்கும் வேலையில் பாமக உட்கட்சி…

11 hours ago

மதுரை-தூத்துக்குடி டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கலாம்.! தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன்…

12 hours ago

ஏ.ஆர். ரஹ்மான் கான்செர்ட் – ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு.!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய "மறக்குமா நெஞ்சம்" என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு…

12 hours ago