கோரிக்கைகள் நிறைவேற்ற முதலமைச்சர் உறுதி.! இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்.!

Published by
மணிகண்டன்

சம வேலை சம ஊதியம் , சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை, நுங்கம்பாக்கம், டிபிஐ அலுவலகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசியரியர்கள் சங்கம் சார்பில் இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நேற்று முன்தினம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பகுதிநேர ஆசிர்யர்களின் தொகுப்பூதியத்தை 10 ஆயிரத்தில் இருந்து 2500 ரூபாய் வரை உயர்த்தி 12500 ரூபாய் வழங்கப்படும், எனவும் 10 லட்சம் ரூபாய் வரையில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் இடைநிலை ஆசிரியர்கள் வைத்த சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.

இதனை அடுத்து பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிமாக வாபஸ் பெற்றனர். அடுத்ததாக நேற்று காலை இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடர டிபிஐ அலுவலகம் வந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் இன்று தலைமை செயலகத்தில் இடைநிலை மூப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் முதன்மை கல்வி அலுவலர் உடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை முடிந்து வெளியில் வந்த சங்க நிர்வாகிகள், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், எங்கள் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் ஏற்றுள்ளனர். 20,000 ஆசிரியர்கள் நலன் கருதி குழு அமைத்து 3 மாதத்தில் பரிசீலகிக்கப்பட்டு உடனடியாக கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர்.  இதனை தொடர்ந்து தற்போது போராட்டம் வாபஸ் பெறுவதாகவும், மாணவர்களின் நலன் கருதி நாளை முதல் பள்ளிகளுக்கு செல்ல உள்ளளவும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

20 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

38 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

1 hour ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

16 hours ago