இந்தியா

வள்ளலாருக்கும் காவி உடை சாத்த நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது – சி.பி.எம். மாநில செயலாளர்

Published by
பாலா கலியமூர்த்தி

ஆளுநர் ஆர்.என்.ரவி வள்ளலார் குறித்து பேசியது தொடர்பாக தஞ்சையில் சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி.

கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-ஆவது ஜெயந்தி விழாவில் ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சு சர்ச்சையானது. அதாவது, சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வரிகள் சனாதன தர்மத்தின் வெளிப்பாடு. எல்லா உயிர்களையும் நம்மில் ஒரு அங்கமாக பார்ப்பது தான் சனாதன தர்மம்.

வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன் என பேசியது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தஞ்சையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய  சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆளுநரின் கருத்து வள்ளலாரையே இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.

வள்ளலார் தான் ஆன்மிகத்தின் சனாதனத்தின் உச்சம், சனாதனம் தான் இந்தியாவில் நீண்ட காலமாக ஆட்சி செய்கிறது என்பது போல ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். சனாதனம், மதவெறி என சாதி மேலாதிக்கம் போன்றவற்றை கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார். அப்படிப்பட்டவரை ஆளுநர் சனாதனத்தின் உச்சம் என்று கூறுவது, வள்ளலாருக்கும் காவி உடை சாத்த நினைப்பது, முறையல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே போல இந்தியாவை பற்றி காரல் மார்க்ஸ் தவறாக பேசியிருப்பதாக ஆளுநர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பேசிய சி.பி.எம். மாநில செயலாளர், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்துவது பாராட்டுக்குரிய நல்ல விஷயம். ஒத்த கருத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை ஈடுபட்டுள்ளனர். சொந்த அனுபவத்தின் அடிப்படையில் எதிரிக்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. பாஜக 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவவுள்ளது எனவும் கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – அரியலூர் மாவட்டம் முதலிடம்.!

சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…

17 minutes ago

வெளியானது 10ம் வகுப்பு ரிசல்ட்! அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டம்?

சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…

36 minutes ago

மாணவர்களே 10-ஆம் வகுப்பு ரிசல்ட் வந்தாச்சு…எப்படி பார்க்கலாம்?

சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச்  28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…

1 hour ago

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

16 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

17 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

17 hours ago