பல கோடி வரிஏய்ப்பு புகாரை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனமான, ஜி ஸ்கொயர் நிறுவனங்களின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் தொடர்புடைய 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையைத் தொடங்கினர். சென்னை, திருச்சி, கோவை, பெங்களூரு, மைசூர் மற்றும் பெல்லாரி போன்ற நகரங்களில் நேற்று ஐடியினர் சோதனை நடத்தியதை தொடர்ந்து, இன்றும் இரண்டாவது நாளாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர் வருமான வரித்துறையினர்.
அந்த வகையில், கர்நாடகாவில் பெங்களூரு,மைசூர் ஆகிய நகரங்களிலும், தெலுங்கானாவில் ஐதராபாத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணாமலை குற்றசாட்டு:
கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி, திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்ட தமிழக பாஜக அண்ணாமலை, ஜீ ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்துடன் திமுக உடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வைத்த குற்றசாட்டுகள் தவறானவை என ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்:
இதுதொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவனம் கூறுகையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயலால் பல ஆண்டு உழைப்பில் பெறப்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளது. எங்களுடைய சொத்து மதிப்பு என அண்ணாமலை குறிப்பிட்டுள்ள தொகை தவறானது என விளக்கமளித்துள்ளது.
சென்னை : தவெகவில் இன்று புதிதாக இணைந்த முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ்-க்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கி…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு…
சென்னை : தாம்பரம் பகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வரும் 13-வயது சிறுமி ஒருவருக்கு பாலியல்…
கோவை : நடப்பாண்டு (2025) TNPL கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம்…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டு அதற்கான…
மும்பை: இன்று காலை (ஜூன் 9, 2025) புறநகர் ரயில் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஓடும் ரயிலில் இருந்து…