கலைஞர் நூற்றாண்டு விழா..! ஓராண்டுக்கு கொண்டாட உள்ளதாக திமுக செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவு..!

Published by
செந்தில்குமார்

கலைஞர் நூற்றாண்டு விழாவை ஓராண்டுக்கு கொண்டாட உள்ளதாக திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சரான மு.கருணாநிதி 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் நாள் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பிறந்தார். அவரது நூற்றாண்டு விழா வருகின்ற ஜூன் 3ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் தொடங்கியது. அந்த கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஜூன் 3 முதல் அடுத்தாண்டு ஜூன் 3ம் தேதி வரை ஓராண்டுக்கு கொண்டாட உள்ளதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கருணாநிதி பிறந்தநாளை அனைத்து வார்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், திருவாரூர் காட்டூரில் ஜூன் 20ம் தேதி கலைஞர் கோட்டத்தை, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சிதம்பரம் ரயிலில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின்.!

கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…

26 minutes ago

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்.!

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…

53 minutes ago

லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!

சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…

1 hour ago

பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.., இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…

2 hours ago

ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளி விட்ட வழக்கு.., குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை.!!

திருப்பத்தூர் : ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை கீழே தள்ளிய வழக்கில், குற்றவாளியான ஹேமராஜுக்கு…

2 hours ago

“மதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலுக்கு நான் காரணம் அல்ல” – மல்லை சத்யா அறிக்கை.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை…

3 hours ago