kallakurichi - kallasarayam [File Image]
கள்ளக்குறிச்சி : விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஷச்சாராய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை கவனிக்க வட்டாட்சியர்கள், தனி வட்டாட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கருணாபுரத்தைச் சேர்ந்த 29 பேரின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்பொழுது, எரியூட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கருணாபுரம் ஆற்றங்கரையோரம் சடலங்களை எரியூட்ட அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் வருகை தந்துள்ளனர்.
இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவிட்டு அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த, நிவாரண தொகைக்கான காசோலையையும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கினார்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…