காவேரி விவகாரத்தில் இதே நிலை நீடித்தால் தமிழகத்திற்கு அபாயம்.! டெல்லி சென்று திரும்பிய அமைச்சர் துரைமுருகன் பேட்டி.!

Published by
மணிகண்டன்

காவேரியில் இருந்து இதே போல குறைந்த அளவு தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டால் அது ஆபத்து என அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார். 

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் கடந்த மாதம் குறிப்பிட்ட அளவை விட குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்தும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் ஆலோசிப்பதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றார். அங்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் அவர்களை சந்தித்து பேசினார். அவரிடம் காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பினார்.

தமிழகம் திரும்பிய அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்திற்கு காவிரி நதியில் இருந்து கர்நாடகா அரசு தரும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. ஒரு நாளைக்கு தோராயமாக ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். கடந்த மாதம் முதல் கடந்த மூன்றாம் தேதி வரையில் 12 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், 2.9 டிஎம்சி தண்ணீர் தான் திறந்து விடப்பட்டுள்ளது. 9.2 டிஎம்சி தண்ணீர் வேறுபாடு உள்ளது.

இதனால் குருவை சாகுபடி கூட தமிழகத்தில் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. டெல்டா பயிரை காப்பாற்றுவதற்கு காவிரி நீர் கண்டிப்பாக தேவை. இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை. எனவே இதுகுறித்து காவிரி தீர்ப்பாயம் கர்நாடகா அரசு வலியுறுத்த சொல்லுமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிடம் கேட்டுக்கொண்டேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விடாமல் இருப்பது சட்டப்படி குற்றம் எனவும் தனது கண்டனத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

குற்றம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பஞ்சாப் vs மும்பை: மழை காரணமாக குவாலிஃபையர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம்.!

அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…

8 hours ago

“இது ஒன்றும் போட்டியல்ல.., இந்த ஒப்பீடு தேவையற்றது” – மனம் திறந்த பாடகி சின்மயி.!

சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…

9 hours ago

பஞ்சாப் vs மும்பை: பைனலுக்கு போக போவது யார்? டாஸ், பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

9 hours ago

“மக்கள் ஆதரவுடன் திமுக கூட்டணி வெற்றி பெறும்” – விசிக தலைவர் திருமாவளவன்.!

புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…

9 hours ago

“தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்” இதான் நடக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…

10 hours ago

ஆதவ் அர்ஜுனா விவகாரம்: ”விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை” – எடப்பாடி பழனிசாமி.!

சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…

11 hours ago