MBBS பொது கலந்தாய்வுக்கு தமிழக முதல்வர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்.! அமைச்சர் மா.சுப்ரமணியன் திட்டவட்டம்.!

Published by
மணிகண்டன்

MBBS பொது கலந்தாய்வுக்கு தமிழக முதல்வர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் என அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று சென்னையில் கூறியுள்ளார். 

MBBS எனும் இளங்கலை பொதுமருத்துவம் மற்றும் இளங்கலை பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு NEET மதிப்பெண் அடிப்படையில் ஆண்டுதோறும் கலந்தாய்வு நடைபெறும். அண்மையில் மத்திய அரசு அறிவித்த அறிவிபின் படி, 100 சதவீத பொது கலந்தாய்வை மத்திய தேசிய மருத்துவ முகமையின் கீழ் செயல்படும்  இளங்கலை கல்வி வாரியம் நடத்தும் என அறிவிப்பு வெளியானது.

முன்னதாக, மாநில அரசு கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்பிற்கான காலிப்பணியிடங்களில் 85 சதவீததையும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களையும், நிகர் நிலை கல்லூரிகளில் உள்ள மருத்துவ இளங்கலை மாணவர் சேர்க்கையை அந்தந்த மாநில அரசுகள் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை உறுதி செய்து வந்தனர். மீதம் உள்ள இடங்களில் (அரசு கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடம் போல) மத்திய அரசு கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் மத்திய அரசின் 100 சதவீத பொது கலந்தாய்வு முடிவு மாநில அரசுகள் சார்பில் கடும் எதிர்ப்பை உண்டாக்கின. இதுகுறித்து ஏற்கனவே தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு ஆட்சேபனை கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

தற்போது தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீண்டும் தனது எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார். இன்று  சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கலந்துகொண்டார்.

அப்போது அமைச்சர் பேசுகையில், மத்திய அரசின் பொது கலந்தாய்வுக்கு தமிழக முதல்வர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். அப்படி பொது கலந்தாய்வு நடைபெற்றால், தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்த கிராமப்புற அரசு பள்ளி ஏழை மாணவர்களுக்கான 7.5 இடஒதுக்கீடு பாதிக்கப்படும். அதிநவீன வசதிகள் கொண்ட சென்னை மருத்துவ கல்லூரிகளில் தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உருவாகும்.

வெளி மாநிலத்திற்கு உள்ள மாணவர்கள் சென்னை கல்லூரிகளில் படிக்க நேரிடும். இது ஜனநாயகத்திற்கு புறம்பானது. தமிழக அரசு கோரிக்கை வைக்கும் போது, இந்தாண்டு பொது கலந்தாய்வு இருக்காது என சொன்னார்கள். ஆனால்,தற்போது மீண்டும் அறிவித்து உள்ளார்கள். பொது கலந்தாய்வை தமிழக முதல்வர் ஒருபோதும்  அனுமதிக்க மாட்டார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

29 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

1 hour ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

2 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

18 hours ago