மோடிக்கும் பயமில்லை.. EDக்கும் பயமில்லை… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.!

Published by
மணிகண்டன்

மோடிக்கும் பயப்பட மாட்டோம், EDக்கும் பயப்பட மாட்டோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று புதுக்கோட்டை கூட்டத்தில் பேசியுள்ளார். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை  கொண்டாடுவதற்காக, அதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் புதுக்கோட்டையில் நேற்று மாலை மிகப்பெரிய பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழகத்தில் நடத்த விடாமல் ஒரு கும்பல் போராடியது. ஆனால், ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் தமிழகத்தில் நடத்தப்படுவதற்கு காரணம் இளைஞர்கள் நடத்திய போராட்டம் தான் என அனைவரும் அறிவர். தற்போது அரசியலில் அந்த பாசிச கட்சி ஜல்லிக்கட்டை ஆட ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் அதை கூட அவர்களால் நேர்மையாக ஆட முடியவில்லை. பின்வாசல் வழியாக வருகின்றனர். ஜல்லிக்கட்டு பொறுத்த வரை வாடிவாசல் வழியாகத்தான் காளைகள் வரும். ஆனால் பாசிச கட்சிகள் புறவாசல் வழியாக தான் வருகிறது என விமர்சித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் நுழைய பாஜக முயற்சி செய்து வருகிறது. அதற்கு பாஜகவின் கிளையாக அதிமுகவை மாற்றி விட்டது. மத்திய அரசின் அடக்கு முறையை கண்டு திமுக என்று பயந்தது கிடையாது. எத்தனை மோடி அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது.

பாஜகவில் தொண்டர் படை என்பது வருமானவரித்துறை, அமலக்கத்துறை, சிபிஐ தான். 2014 பாஜக ஆட்சிக்குப் பிறகு அமலாக்கத்துறையினர் 121 அரசியல் தலைவர்களை விசாரித்துள்ளனர். அதில் 115 பேர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். இப்படி தான் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணை நடத்தியுள்ளனர்.

மோடிக்கு நெருக்கமாக இருக்கும் அதானியிடம் அமலாக்கத்துறையினர் நடத்தவில்லை நாங்கள் மோடிக்கு பயப்பட மாட்டோம். இடிக்கும் (ED – Enforcement Department ) பயப்பட மாட்டோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் பாசிச கூட்டணியை விரட்டியடிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த விழாவில் பேசி முடித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

1 hour ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

2 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

2 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

3 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

3 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

4 hours ago