மோடிக்கும் பயமில்லை.. EDக்கும் பயமில்லை… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.!

Published by
மணிகண்டன்

மோடிக்கும் பயப்பட மாட்டோம், EDக்கும் பயப்பட மாட்டோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று புதுக்கோட்டை கூட்டத்தில் பேசியுள்ளார். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை  கொண்டாடுவதற்காக, அதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் புதுக்கோட்டையில் நேற்று மாலை மிகப்பெரிய பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழகத்தில் நடத்த விடாமல் ஒரு கும்பல் போராடியது. ஆனால், ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் தமிழகத்தில் நடத்தப்படுவதற்கு காரணம் இளைஞர்கள் நடத்திய போராட்டம் தான் என அனைவரும் அறிவர். தற்போது அரசியலில் அந்த பாசிச கட்சி ஜல்லிக்கட்டை ஆட ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் அதை கூட அவர்களால் நேர்மையாக ஆட முடியவில்லை. பின்வாசல் வழியாக வருகின்றனர். ஜல்லிக்கட்டு பொறுத்த வரை வாடிவாசல் வழியாகத்தான் காளைகள் வரும். ஆனால் பாசிச கட்சிகள் புறவாசல் வழியாக தான் வருகிறது என விமர்சித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் நுழைய பாஜக முயற்சி செய்து வருகிறது. அதற்கு பாஜகவின் கிளையாக அதிமுகவை மாற்றி விட்டது. மத்திய அரசின் அடக்கு முறையை கண்டு திமுக என்று பயந்தது கிடையாது. எத்தனை மோடி அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது.

பாஜகவில் தொண்டர் படை என்பது வருமானவரித்துறை, அமலக்கத்துறை, சிபிஐ தான். 2014 பாஜக ஆட்சிக்குப் பிறகு அமலாக்கத்துறையினர் 121 அரசியல் தலைவர்களை விசாரித்துள்ளனர். அதில் 115 பேர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். இப்படி தான் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணை நடத்தியுள்ளனர்.

மோடிக்கு நெருக்கமாக இருக்கும் அதானியிடம் அமலாக்கத்துறையினர் நடத்தவில்லை நாங்கள் மோடிக்கு பயப்பட மாட்டோம். இடிக்கும் (ED – Enforcement Department ) பயப்பட மாட்டோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் பாசிச கூட்டணியை விரட்டியடிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த விழாவில் பேசி முடித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

12 minutes ago

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’…தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…

44 minutes ago

சந்திராயன் 4 திட்டம் வெற்றிகரமாக அமையும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…

1 hour ago

கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!

சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…

2 hours ago

வாக்காளர்கள் பெயர் நீக்கம் : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…

3 hours ago

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…

4 hours ago